​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு 15 நாட்கள் காலக்கெடு" - மேயர் பிரியா

Published : May 08, 2022 2:39 PM

"குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு 15 நாட்கள் காலக்கெடு" - மேயர் பிரியா

May 08, 2022 2:39 PM

சென்னையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு முதலில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 15 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும் எனவும் அதன் பிறகே அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

கே.கே நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பிறகு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.